பெருந்தோட்ட மக்களை வலுவூட்டும் புரிந்துணர்வு உடன்படிக்கையில் சஜித் கைச்சாத்து
பெருந்தோட்ட மக்களை வலுவூட்டும் நோக்கில் பெருந்தோட்ட அரசியல் கட்சித் தலைவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (12) புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார்.
இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மனோ கணேசன், கௌரவ பழனி திகாம்பரம் மற்றும் கௌரவ எம்.உதயகுமார உள்ளிட்ட தோட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் கையொப்பமிட்டனர்.