உள்நாடு

புத்தளம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நகரக் கிளையின் காரியாலயம் திறந்து வைப்பு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் காரியாலயம் நேற்று 12.08.2024 திங்கட்கிழமை உத்தியோக பூர்வமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் கிளை மற்றும் மாவட்டத்தின் முன்னாள் தலைவர் அஷ்ஷேக் அப்துல்லாஹ் ஹஸரத் அவர்கள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் மாவட்டத்தின் தலைவர் அஷ்ஷேக் தமீம் ரஹ்மானி ஹஸரத் அவர்கள் மற்றும் புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் அலி சப்ரி ரஹீம் அவர்களின் கரங்களால் திறந்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வை ஆரம்பித்கும் முகமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் உறுப்பினர் அஷ்ஷேக் ஆதீப் ரஹ்மானீ அவர்களினால் கிராஅத் ஓதி ஆரம்பிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து தலைமை உரை வரவேற்புரை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் தலைவர் அஷ்ஷேக் ஜிப்னாஸ் அல் மிஸ்பாஹி அவர்களால் நடத்தப்பட்டது.

அதன் பின்னர் விசேட உரை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் மற்றும் மாவட்டத்தின் முன்னாள் தலைவர் அஷ்ஷேக் அப்துல்லாஹ் ஹஸரத் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.

அதனை தொடர்ந்து சிறப்புரை புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் அலி சப்ரி ரஹீம் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.

அதனை தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் காரியாலயம் உத்தியோக பூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து நன்றியுரை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் உறுப்பினர் அஷ்ஷேக் சாபீ ஸஹ்தீ அவர்களால் நிகழ்த்தப்பட்டது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் மாவட்டத்தின் தலைவர் அஷ்ஷேக் தமீம் ரஹ்மானி ஹஸரத் அவர்களால் துஆவுடன் இந்நிகழ்வு முடிவடைந்தன.

இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வுக்கு விசேட அதிதிகளாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் மற்றும் மாவட்டத்தின் முன்னாள் தலைவர் அஷ்ஷேக் அப்துல்லாஹ் ஹஸரத் அவர்களும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் மாவட்டத்தின் தலைவர் அஷ்ஷேக் தமீம் ரஹ்மானி ஹஸரத் அவர்களும் புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் அலி சப்ரி ரஹீம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

சிறப்பு அதிதிகளாக முன்னால் கல்விப்பணிப்பாளர் ஆசிரியர் சன்ஹிர் ஓய்வுபெற்ற ஆசிரியர் சலீம் ஸாஹிரா தேசிய பாடசாலையின் அதிபர் நஜீம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலையின் அதிபர் முஹ்சி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் மாவட்டத்தின் செயலாளர் அஷ்ஷேக் அப்துர் ரசீத், அகில இலங்கை அஹதிய்யா சம்மேளனத்தின் செயளாலர் ஆசிரியர் பதீன், நகர சபையின் AO நெளசாத், புத்தளம் வியாபார சங்கத்தின் உறுப்பினர் ஹிஷாம், தொழிலதிபர்கள் சகோதரர் றிஸ்வான் ஹாஜி, சகோதரர் ஜப்ரீஸ் ஹாஜி , சகோதரர் அலி சிமாக் ஹாஜீ, சகோதரர் முஜிபர் ஹாஜீ, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் முன்னாள் செயளாலர் ஆசிரியர் பைளுர்ரஹ்மான் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

மற்றும் சமூக சேவையாளர்கள் சகோதரர் முஜாஹித் நிசார், சகோதரர் ரிஸ்வான், சகோதரர் அஸ்பீ, சகோதரர் மரைக்கார், வைத்தியர் அஸ்லம், சகோதரர் ரிஸ்வீ, சகோதரர் அம்ஹர், சகோதரர் நவ்பல், சகோதரர் ரிசான், சகோதரர் ரசீம், சகோதரர் முபாரிஸ் மெளலவி ஸைன் ஆகியோர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் மாஸ்டர் மொபைல் உரிமையாளர் சகோதரர் அஸ்பீ அவர்களால் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளைக்கு மைக் செட் ஹதியா செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வுக்கு வருகை தந்த அனைவருக்கும் அவர்களின் வாழ்க்கையிலும் ஆரோக்கியத்திலும் அல்லாஹூதாஆலா பரகத் செய்வானாக.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *