உள்நாடு

சாதனை வீரன் சஹ்மி சஹீதிற்கு பேருவளை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் வாழ்த்து..!

இலங்கைத் திருநாட்டை ,கரையோரமாக நடைபவனியில் சுற்றி சாதனை படைக்கும் நோக்குடன்,கடந்த ஜூலை மாதம் 13 ஆம் திகதி தனது நடைப் பயணத்தை ஆரம்பித்த சஹ்மி சஹீதிற்கு, முன்னாள் பேருவளை பிரதேச சபை தலைவரும், முன்னாள் பேருவளை உதைபந்தாட்ட கழகத்தின் தலைவருமான அல்ஹாஜ் ஏ.ஆர்.எம் பதியுதீன் முஹம்மத் அவர்கள் வாழ்த்துத்தெரிவித்துள்ளார் .

அவரது வாழ்த்துச் செய்தியில்;

இக்காலகட்டத்தில் பல இளைஞர்கள் ,போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகும் நிலையில், சஹ்மியின் இம்முயற்சியானது ,தனது உடலுக்கு பெரும் பயிற்சியாக அமைவதோடு,பிற இளைஞர்களுக்கும் நல்லதோர் முன்மாதிரியாக அமைந்துள்ளது.மேலும் சஹ்மியின் கடந்த காலத்தை நான் அறிவேன், சமூகப் பணிகளில் ஆர்வமாக ஈடுபடக்கூடிய துடிப்பான ஒரு இளைஞன்,அவரது இப்பயணம் எந்தத் தடைகளும் இன்றி வெற்றிகரமாக முடிவதற்கு நான் இறைவனைப் பிராத்திக்கின்றேன் என்றார்.

மேலும் கூறிய அவர்,நாட்டின் எல்லாப் பிரதேச மக்களும் சஹ்மிக்கு வழங்கிய பேராதரவிற்கு, முன்னாள் பேருவளை பிரதேச சபை தலைவர் என்ற வகையில் நான் நன்றி கூறுகிறேன். என்று கூறினார்.

சஹ்மி ஷஹீத் 10.08.2024 அன்று யாழ் மாநகரத்தை சென்றடைந்துள்ளதோடு,அவரை சந்திப்பதற்காக அவரது சொந்த ஊரான பேருவளையிலிருந்து பலர் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

(பேருவளை  பீ.எம் முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *