உள்நாடு

கல்முனை பிரதேச கிறிக்கட் சாதனையாளர்கள் கெளரவிப்பு..!

கல்முனை பிரதேசத்தில் கிரிக்கெட் துறையில் சாதனை படைத்த சாதனையாளர்களுக்கான கௌரவிப்பு  நிகழ்வு  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இளைஞர் காரியாலயத்தில் (11) இடம்பெற்றது.

 தேசம் கடந்து ஓமான் நாட்டில் சர்வதேச கழகங்களுக்கு விளையாடி வருகின்ற எம். ஏ. எம் . றாஸ்பாஸ்,ஏ. எம். சஜாத், ஜே. கே. அஃப்லல் காரியப்பர்  மற்றும் எமது பிராந்தியத்திலிருந்து அம்பாறை அணிக்காகவும் டிவிசன் 3 அணிக்காகவும்,  கவர்னர் கிண்ணத்துக்காகவும்  விளையாடி வருகின்ற ஏ. என். எம் ஆபாக்  ஆகியோரை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட அமைப்பாளரும்  மயோன் கல்வித்திட்ட மற்றும் சமூக அமைப்பின் தலைவருமான றிஸ்லி முஸ்தபா அவர்கள்  காரியாலயத்தில் வைத்து கௌரவித்தார்.
(எம்.ஏ.ஏ.அக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *