உள்நாடு

திங்கள், செவ்வாய் பணிகளிலிருந்து விலகும் கிராம அதிகாரிகள்

ஐக்கிய கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கத்தின் அழைப்பின் பேரில் இன்றும் (12) நாளையும் (13) நாடு தழுவிய ரீதியாக கிராம அதிகாரிகள், தங்களுடைய பணிகளில் இருந்து விலகி இருப்பதற்குத் தீர்மானித்துள்ளனர்.

தங்களது பல்வேறு கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் இதுவரை யில் கவனம் செலுத்தவில்லை என்றும், தொடர்ந்தும் தங்களது அனைத்து வேண்டுகோள்களும் நிராகரிக்கப்பட்டு வந்ததாகவும், தொழிற்சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

அந்த வகையில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் முகமாக, இன்றும் (12) நாளையும் (13) முழுமையாக தங்களுடைய பணிகளிலிருந்து விலகி இருப்பதாகவும், அத்துடன் கிராம அதிகாரிகளது அலுவலகங்கள் குறித்த இரண்டு தினங்களிலும் மூடப்பட்டிருக்கும் என்பதை பொதுமக்களுக்கு அறிவிப்பதாகவும் அறிக்கை ஒன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் காரணமாக, பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பில், தங்களுடைய ஆழ்ந்த வருத்தத்தையும் கவலையையும் தெரிவிப்பதாகவும், ஐக்கிய கிராம அதிகாரிகள் தொழிற்சங்கம் மேலும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

( ஐ. ஏ. காதிர் கான் )

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *