உள்நாடு

பொதுஜன பெரமுன அனுராதபுரத்தில் கூட்டத்தை நடாத்திக் காட்டட்டும்-எஸ்.எம்.சந்திரசேன சூளுரை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக அதிர் வரும் 17 ம் திகதி அனுராதபுரத்தில் கன்னி தேர்தல் பிரசாரக் கூட்டத்தை நடத்துவோம் . முடிந்தால் பொதுஜன பெரமுன அனுராதபுரத்தில் கூட்டத்தை நடத்தி காட்டட்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு சவால் விடுத்தார்.

அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் (11) கலந்து கொண்டு  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் அவ்வாறு தெரிவித்தார்.

எனக்கு பாடம் கற்பிப்பதற்காக அனுராதபுரம் மாவட்ட தலைவராக நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். அனுர குமார திஸாநாயக்க அனுராதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.ஆனால் நாமல் ராஜபக்ஷ அம்பாந்தோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனக்கு சவாலாக அனுராதபுரம் மாவட்டத்திற்கு நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் மாவட்ட மக்களின் அபிலாசைகளுக்கு அமைவாகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.அதற்கமைய செயல்படுவது அரசியல் வாதிகளின் பொறுப்பாகும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் வகையில் எதிர் வரும் 17 ம் திகதி அனுராதபுரம் சல்காது மைதானத்தில் கன்னி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.அதற்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளோம்.

ஒவ்வொரு தேர்தலின் போதும் பொதுஜன பெரமுன தேர்தல் பிரசாரக் கூட்டங்களை அனுராதபுரத்தில்தான் நடத்துவது . முடியுமாயின் இம்முறை பொதுஜன பெரமுன கன்னி தேர்தல் பிரசாரக் கூட்டத்தை அனுராதபுரத்தில் நடத்திக் காட்டட்டும் என நாமல் ராஜபக்சவுக்கு சவால் விடுவதாக  எஸ்.எம்.சந்திரசேன மேலும் தெரிவித்தார்.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *