உள்நாடு

மடாட்டுகம விபத்தில் ஒருவர் பலி

மடாட்டுகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலாகல பகுதியில் (10) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த விபத்தில் கித்துல்ஹிட்டியாவ பகுதியைச் சேர்ந்த அமித் குமார ஜயசிங்க என்ற 29 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.

தம்புள்ளையில் இருந்து கெக்கிராவ நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று கெக்கிராவ பகுதியிலிருந்து தம்புள்ளை நோக்கிப் பயணித்த கெப் வாகனத்துடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தின் போது முச்சக்கர வண்டியின் சாரதியும் பின்புறத்தில் அமர்ந்திருந்த நபரொருவரும் படுகாயமடைந்த நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பின்னர் சிகிச்சை பலனின்றி முச்சக்கர வண்டி சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மன்னார் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய கெப் வாகனத்தின் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மடாட்டுகம பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *