உள்நாடு

இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமாரினால் விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட உப அதிபர் இல்ஹானா ஹாரிஸ்

உப அதிபர் இல்ஹானா வாரிஸ் அவர்களுக்கு உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் சான்றிதழ் வழங்கினார்

புத்தளம் பாத்திமா பெண்கள் கல்லூரியின் உப அதிபர் திருமதி. இல்ஹானா வாரிஸ் அவர்கள் STEAM Education பயிற்சி நெறியினை வெற்றிகரமாக நிறைவு செய்தமைக்காக, உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் அவர்களால் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் கடந்த 2024 ஜூலை 29ஆம் திகதி, STEAM Education பயிற்சி நெறியினை நிறைவு செய்த ஆசிரியர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் இதில் கலந்து கொண்டு பயிற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்தனர். இந்தப் பயிற்சியின் மூலமாக ஆசிரியர்கள், துறைசார் தொழில்நுட்பத்திலும் அறிவியல், பொறியியல், கலை, மற்றும் கணித கல்வியிலும் அவர்களது திறன்களை மேம்படுத்திக்கொள்ளும் வாய்ப்பினை பெற்றுள்ளனர்.

இதில், புத்தளம் பாத்திமா பெண்கள் கல்லூரியின் உப அதிபர் இல்ஹானா வாரிஸ் அவர்கள் STEAM Education பயிற்சியில் ஈடுபட்டு, அதன் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தமைக்காக கௌரவிக்கப்பட்டனர்.

 

(ஏ.சி பௌசுல் அலிம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *