உள்நாடு

ஷஹ்மிக்கு முன்னாள் மேல்மாகாண சபை உறுப்பினர் அம்ஜாத் வாழ்த்து

நாட்டைச் சுற்றி சமாதான நடபவனி மேற்கொண்டுவரும் ஷஹ்மி ஷஹீதிற்கு, முன்னாள் மேல்மாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ் அம்ஜாத் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அவரது வாழ்த்துச் செய்தியில் கூறியதாவது;சஹ்மியின் இந்தச் சாதனைப்பயணம் , ஏனைய வாலிபர்களுக்கும் ஏதாவது ஒன்றில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்துள்ளது,மேலும் பிற மாகாண மக்கள் சஹ்மிக்கு வழங்கிய அமோக வரவேற்பிற்கு ,மேல் மாகாண மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சஹ்மியின் நடைபயண அனுராதபுரம் சென்றடையும் போது , நானும் சஹ்மியை சந்தித்து உற்சாகமளிக்க உள்ளேன், அவர் பயணத்தின் அடுத்த கட்டத்தையும் தடைகள் இன்றி உடல் மற்றும் மன உறுதியோடு முடிப்பதற்கு இறைவனைப் பிராத்தித்துக் கொள்கிறேன்” என்றார்.

கடந்த ஜூலை மாதம் 13 ஆம் திகதி தனது நடைப் பயணத்தை ஆரம்பித்த ஷஹ்மி ஷஹீத்,இன்று யாழ்ப்பாணத்தை சென்றடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *