உள்நாடு

கொழும்பு சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்ட திருக்குர்ஆன் பிரதிகளை விடுவிக்க அனுமதி

இந்த ஆண்டு (2024) ஏப்ரல் மாதம் முதல் கொழும்பு சுங்கத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த புனித திருக்குர்ஆன் மற்றும் திருக்குர்ஆனின் மொழிபெயர்ப்புப் பிரதிகளை விடுவிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி பாதுகாப்பு அமைச்சு, புனித திருக்குர்ஆன் பிரதிகளை கொழும்பு சுங்கத் திணைக்களத்திலிருந்து விரைவாக அகற்றுவதற்கு, முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு (DMRCA) உத்தியோக பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *