உள்நாடு

கல்பிட்டியில் 4 கிலோவிற்கும் அதிகமான தங்கம் கடற்படையினரால் மீட்பு

கல்பிட்டியில் உள்ள தொரையடி சிறுகடல் பரப்பில் இலங்கை கடற்படையினரால் 4 கிலோ 740 கிராம் நிறையுடைய தங்கம் பொதி ஒன்று நேற்று 06 ஆம் திகதி கைப்பற்றப்பட்டது.

இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சிறுகடல் பரப்பின் ஆழத்தில் இருந்து 04 கிலோ 740 கிராம் நிறையுடைய தங்கம் பொதி ஒன்று நேற்று 06 ஆம் திகதி மீட்கப்பட்டது. மேலும், தோராயடி கடற்கரைக்கு அருகில் டிங்கி படகு ஒன்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர், இது பொதியை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

கடல் வழிகள் ஊடாக நிகழும் மோசமான செயற்பாடுகளைத் தடுக்கும் நோக்கில், கடற்படையானது தீவைச் சுற்றியுள்ள கரையோர மற்றும் கடற்பரப்புகளில் வழக்கமான தேடுதல் நடவடிக்கைகள் மற்றும் ரோந்துப் பணிகளை மேற்கொள்கின்றது.

இதனிடையே கடற்படைக்குக் கிடைத்த தகவலின் பேரில் வடமேற்கு கடற்படை கட்டளையின் SLNS விஜயா இந்த விசேட நடவடிக்கையை தொரயடி சிறுகடல் பரப்பின் மேற்கொண்டது. இந்த நடவடிக்கையின் மூலம் சிறுகடல் பரப்பின் வீசியெறியப்பட்ட 04 கிலோ 740 கிராம் தங்கம் அடங்கிய பொதி மீட்கப்பட்டதுடன், தோராயடி கடற்கரைக்கு அருகில் டிங்கி படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டது.

கடத்தல்காரர்கள் தங்கம் பொட்டலத்தை வேண்டுமென்றே மூழ்கடித்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது, மேலும் அவை கண்டுபிடிக்கப்படுவதைத் தவிர்க்கவும், பின்னர் அவற்றை எடுத்துச் செல்லவும் இதனை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது

கைப்பற்றிப்பட்ட 04கிலோ 740 கிராம் தங்கம் அடங்கிய பொதி மற்றும் இந்த நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட டிங்கி ஆகியவை சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *