உள்நாடு

கல்பிட்டி, மாம்புரி பகுதியில் விபத்து; காயமடைந்தவர்கள் ஐவர் வைத்தியசாலையில்…!

புத்தளம் கல்பிட்டி பிரதான வீதியின் மாம்புரி பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்தவர்கள் ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (7) கல்பிட்டியிலிருந்து புத்தளம் நோக்கி பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மாம்புரி சந்தியில் திருப்புவதற்க்காக எத்தனித்த முச்சக்கர வண்டியும் மோதியதில் காயமடைந்தவர்களில் முச்சக்கர வண்டியில் பயணித்தவரும், மோட்டார் சைக்கிளில் பயணித்த நால்வரில் இருவரும் புத்தளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்ற இருவரும் கல்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *