உள்நாடு

GMOA தலைவர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் குழுவிற்கும், அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையில் சந்திப்பு..!

நேற்று (06) பிற்பகல் ம.வி.மு. தலைமை அலுவலகத்தில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) தலைவர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் குழுவிற்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இற்றைவரை இலங்கையில் மருத்துவர்கள் எதிர்கொள்கின்ற சிக்கலான நிலைமைகள் மற்றும் அந்த நிலைமைகளை மாற்றியமைப்பதற்கான அச்சங்கத்தின் ஆலோசனைகள் இதன்போது அநுரவிடம் கையளிக்கப்பட்டது.

இந்தச் சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் டாக்டர் நிஹால் அபேசிங்க மற்றும் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் பேராசிரியர் கிறிஷாந்த அபேசிங்க ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *