உள்நாடு

வெற்றியின் பங்காளராகுங்கள்; பிரிந்து சென்றவர்களுக்கு நாமல் அழைப்பு

கட்சியிலிருந்து விலகியவர்களை மீண்டும் கட்சியில் இணையுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதற்கான நிகழ்வு, பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள தலைமையகத்தில் நடைபெற்றது. இதன்போதும் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச கருத்து தெரிவிக்கையில், “ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் திட்டம் இல்லையென்றாலும் சவாலான நேரத்தில் கட்சியின் கோரிக்கைக்கமைய வேட்பாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்.

ஜனாதிபதித் தேர்தலின் போது, ​​பொருத்தமான நபருக்கு ஆடையை வழங்கவே கட்சி காத்துக்கொண்டிருந்தது. பலவந்தமாக எவரையும் வேட்பாளராக நிறுத்த முடியாது. இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெரும் சக்தியாக மாறும்.” என நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *