உள்நாடு

சதுரங்கப் போட்டியில் தேசிய மட்டத்திற்குத் தெரிவான காத்தான்குடி மீரா பாளிகா மாணவிகள் கௌரவிப்பு

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான சதுரங்க போட்டிகள் அண்மையில் திருகோணமலை சிங்கள மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற போட்டி நிகழ்ச்சிகளில் காத்தான்குடி மீரா பாளிகா தேசிய பாடசாலை மாணவிகள் கிழக்கு மாகாண சதுரங்க போட்யிடில் கலந்து கொண்டு 20 வயது பெண்கள் பிரிவில் வெற்றி பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

மாகாணமட்ட சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளை தேசிய மட்ட போட்டிகளுக்கு ஊக்கப்படுத்தி கெளரவப்படுத்தும் நோக்கில் காத்தான்குடி மீரா பாலிகா மாணவிகள் பாடசாலை சமூகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்பு நிகழ்வு கல்லூரியின் அதிபர் யூ.எல்.மன்சூர் தலைமையில் பிரதி அதிபர் யூ.எல்.எம்.என். முபீன் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் இடம்பெற்றது.

 
(அஸ்ஹர் இப்றாஹிம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *