உள்நாடு

ஏறாவூரில் வர்த்தகர் கொலை…!

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிச்நகர் – ஹிஸ்புல்லாஹ் நகரில் வர்த்தகர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் நேற்றிரவு (6) அவரது வர்த்தக நிலையத்தில் வைத்து இடம்பெற்றுள்ளது. போதைப்பொருள் பாவனையாளர்கள் வர்த்தக நிலையத்தை கொள்ளையடிக்க வந்த நிலையில் அதனை கடை உரிமையாளர் தடுத்த போது இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவத்தில் திருமணம் முடிக்காத நிலையில் சில்லறைக் கடை நடாத்தி வந்த 45 வயதுடைய தாவூத் என்பவர் தலைப் பகுதியில் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலையாளிகள் கொலை செய்து விட்டு அங்கு பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.ரீ.வீ. தொடர்பு சாதனங்களை எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸாரின் மேலதிக விசாரணைகளைகளின் போது தெரிய வந்துள்ளது

இந்த கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை கைது செய்து சட்டநடவடிக்கை மேற்கொள்ள ஏறாவூர் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(எச்.எம்.எம்.பர்ஸான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *