உள்நாடு

வடக்கின் தர்மபுரியில் கால்பதித்த சஹ்மிக்கு, தமிழர்கள் எதிர்பாராத அளவில் வரவேற்பு

கடந்த ஜூலை 13 ஆம் திகதி ,சமாதான நோக்குடன் ,நாட்டை சுற்றி நடந்து வரும் தன் சாதனை நடைபவனியை துவங்கிய பேருவளை, சஹ்மி ஷஹீத், (07) ஆம் திகதி வடமாகாணத்தின் தர்மபுரியைச் சென்றடைந்தார்.

வடமாகாணத்தில் இவருக்கு, தமிழ் மக்கள் எதிர்பாராத வரவேற்பு அளித்ததோடு, விருந்துபசாரங்களும் செய்தமை, குறிப்பிடத்தக்கது.

தென்னிலங்கையின் ஓர் முஸ்லிம் இளைஞனை, வெகு சிறப்பாக வரவேற்ற வடக்கின் தமிழ் மக்களுக்கு பேருவளை முஸ்லிம்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

இவர் தனது பயணத்தின் அடுத்த கட்டமாக வடக்கின் யாழ்ப்பாண மாநகர நோக்கி பயனிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சஹ்மியிம் சாதனைப் பயணத்திற்கான பூரண அனுசரனையினை வழங்கும், சிமி ஹோல்டிங் நிறுவன உரிமையாளர் அல்ஹாஜ் இஜ்லான் யூசுஃப் அவர்கள், சஹ்மியின் பேருவளை வருகையின் போது பலத்த வரவேற்பு நிகழ்வுகளை ஏற்பாடு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


(பேருவளை : பீ.எம் முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *