உள்நாடு

யார் எந்த கூட்டணி அமைத்தாலும் ஐக்கிய மக்கள் சக்தியே வெல்லும்..! -பா.உ கயந்த கருணாதிலக்க

நாட்டில் நடக்கும் விடயங்களை பார்க்கும் போது ஒன்றாக இணைந்து மோசடிகளில் ஈடுபட்டு வந்த தரப்பினர் இன்று ரணிலின் பக்கமும், மற்றுமொரு தரப்பு மகிந்தவுடனும் கூடியிருக்கின்றனர்.

ரணில் தான் ஜனாதிபதி எனும் சுவரொட்டிகளுக்கு மக்கள் வழங்கியுள்ள பதில்களை பாருங்கள். 21 ஆம் திகதி வரை என்று தான் எழுதியுள்ளனர்.

2019 இல் பொய்யான தேசியவாதத்துக்கு ஏமாந்தது போல் இன்று போலியான சேசலித்துக்கு ஏமாந்து விட வேண்டாம்.

தொங்கு பாலத்தால் கடந்த மொட்டு உறுப்பினர்களுக்கு இன்று தமது கட்சியையே பிளவுபடுத்தி வருகின்றனர்.

சகல இன கட்சிகளும் சஜித் பிரேமதாச தலைமையிலான எமது கூட்டணியிலே இருக்கின்றனர்.

ஊழல், மோசடி, கொள்ளை, அதிகாரத்தை துஷ்பிரயோகப்படுத்திய, இனவாதத்தை தூண்டிய, குற்றச்சாட்டுககளை கொண்ட தரப்பினரே ஜனாதிபதியின் கூட்டணியில் இணைந்துள்ளனர்.

யார் என்ன கூட்டணி அமைத்தாலும் இன,மத வாதங்கள் இல்லாத சகலரையும் ஐக்கியப்படுத்தக் கூடிய ஐக்கிய மக்கள் கூட்டணியே வெல்லும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *