உள்நாடு

அடை மழையையும் அலட்சியம் என கருதி இலக்கை நோக்கி முன்னேறும் சஹ்மி; நேற்று முல்லைத்தீவை சென்றடைந்தார்

இலங்கை நாட்டை சுதந்திரமாக ,நடந்தே சுற்றி வரும் சாதனை முயற்சியில் ஈடுபட்டு ,கடந்த ஜூலை மாதம் 13 ஆம் திகதி பேருவளையில் தன் பயணத்தை துவங்கிய 25 வயது இளம் யூட்யூபர் சஹ்மி ஷஹீத் , நேற்று வடமாகாணத்தின் முல்லைத் தீவை சென்றடைந்துள்ளார்.

நேற்று (05) தனது 24 ஆவது நாள் பயணத்தை கொக்கல பிரதேச மக்களின் பேராதரவோடும், பிரார்த்தனைகளோடும் ஆரம்பித்து,முல்லைத்தீவை சென்றடைந்தார்.

ஷஹ்மி,தன் சாதனைப் பயணத்தின் முதல் நாள் முதல் கடந்து வந்த மாவட்டங்களில் ,கடும் வெயிலுடனான வானிலை நிலவியதோடு, நேற்று வடமாகாணத்தில் கடும் மழையுடன் கூடிய வானிலை நிலவியது,இருந்தும் மழையை அலட்சியமெனக் கருதி தன் சாதனை இலக்கை நோக்கி பயணித்தமை பாராட்டத்தக்கது.

மேலும் இவரது பயணத்தின் அடுத்தகட்டமாக ,யாழ் நோக்கிய பயணம் இன்று (06) ஆரம்பிக்கப்படவுள்ளதோடு,யாழில் சஹ்மியை உற்சாகப்படுத்துவதற்காக ,பேருவளை இளஞர்கள் யாழ் நோக்கி செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

(பேருவளை : பீ.எம் முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *