உள்நாடு

ஹக்கீம் போன்று நீங்களும் தீர்மானம் எடுக்காமல் எங்களுக்கு ஆதரவு தாருங்கள்; ரிஷாடிடம் கேட்ட ஜனாதிபதி ரணில்

ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் கட்சியின் அரசியல் உயர்பீடம் இன்றிரவு (06) கூடி தீர்மானிக்கவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரான பாராளுமன்ற உறுப்பினரான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

எமது தீர்மானம் தொடர்பில் இன்றிரவு அல்லது நாளை ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும் எனவும அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீனுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார்.

‘ரவூப் ஹக்கீம் போன்று நீங்களும் தீர்மானம் எடுக்காமல் எங்களுக்கு ஆதரவு தாருங்கள்’ என ஜனாதிபதி கேட்டுக் கொண்டுள்ளார்.

 

(சப்ராஸ் – நுரைச்சோலை)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *