உள்நாடு

கல்பிட்டி கோட்டக்கல்வி பணிப்பாளராக A. M. ஜவாத் நியமனம்

கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் பழைய மாணவர், சிறந்த அதிபருக்கான பல விருதுகளை பெற்ற A. M. ஜவாத் (SLEAS) இன்று கல்பிட்டி கோட்டக்கல்வி பணிப்பாளராக பதியேற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் கல்பிட்டி கோட்டக்கல்வி பணிப்பாளராக கடமையாற்றிய M. R தீப்தி பர்ணாந்து , புத்தளம் தெற்கு கோட்டக்கல்வி பணிப்பாளராக சற்று நேரத்தில் பதவியேற்க உள்ள
A. M. நவ்சாத், ஹிதாயத் நகர் மு. வி அதிபர் M.I.M.சியாத், ஆசிரியர் ஆலோசகர்கள், பாடசாலையின் அதிபர்கள், கோட்டக்கல்வி பணிமனையின் உத்தியோகத்தர்கள், நண்பர்கள் கலந்து சிறப்பித்தனர், இந்நிகழ்வில் நானும் நலன்விரும்பியாக ஊடகவியலாளராக கலந்து கொண்டது மிக்க மகிழ்ச்சியை தருகிறது.

(ரிஸ்வி ஹூசைன்-கல்பிட்டி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *