உள்நாடு

அ.இ. மக்கள் காங்கிரஸின் தீர்மானம் 14 ஆம் திகதி..!

ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீடக் கூட்டம் இன்று (06) இரவு கொழும்பில் கூடியது.
இதன்போது, உயர் பீட உறுப்பினர்களின் பல்வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்ற தீர்மானம் எட்டப்படவில்லை.
இதன்படி, எதிர்வரும் 14 ஆம் திகதி, கட்சி மீண்டும் கொழும்பில் கூடி, தனது இறுதித் தீர்மானத்தை வெளியிடும் என, கட்சியின் உயர்பீடம் அறிவித்துள்ளது.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *