உள்நாடு

ஷஹ்மியுடன் சேர்ந்து நடந்த இஜ்லான் யூசுஃப் – சாதனைச் சிறுவன் சலாமாவுடன் கொக்கலையை நீந்திக் கடந்த சஹ்மி..!

இந்நாட்களில்,இலங்கை முழுவதும் பேசுபொருளாக காணப்படும் பேருவளை சஹ்மி ஷஹீத், 04.08.2024 அன்று 22 ஆவது நாள் பயணத்தை ,புடவைக்கட்டு மக்களின் பேராதரவோடும் , பிரார்த்தனைகளோடும் துவங்கி கொக்குவிலை சென்றடைந்தார்.

இவரது அன்றைய பயணத்தில் , புல்மோட்டை மக்கள் ,அவர்களது பாரம்பரிய வரவேற்பு நிகழ்வுகளை நிகழ்த்தி சஹ்மியை வெகுபிரமாண்டமாக வரவேற்றனர்.

மேலும்,ஷஹ்மியை உற்சாகமூட்டுவதற்காக ,இப்பயணத்தின் பூரண அனுசரணையாளர், சிமி ஹோல்டிங் நிறுவன உரிமையாளர் அல்ஹாஜ் இஜ்லான் யூசுஃப் அவர்கள்,சஹ்மியுடன் சேர்ந்து நடைபயணம் மேற்கொண்டமை நெகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

மேலும் இவர் , புல் மோட்டையியிலிருந்து, கொக்கலையை செல்லும்போது ஊர் மக்கள் படகுகளில் சென்று உற்சாகமளித்ததோடு, சஹ்மி சஹீதும், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நீந்திக் கடந்த இளம் சாதனையாளன் முஹம்மத் சலாமாவும் நீந்திச்சென்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

 

(பேருவளை : பீ.எம் முக்தார்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *