உள்நாடு

ஹஷான் திலகரத்ன, அப்சாரி திலகரத்ன சஜித்துடன் இணைந்து கொண்டனர்

இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர்களில் ஒருவரான ஹஷான் திலகரத்ன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில், இன்று (05) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.

இவர், தற்போது பங்களாதேஷ் கிரிக்கெட் மகளிர் அணியின் பயிற்றுவிப்பாளர்களாகவும் கடமையாற்றி வருகின்றார். இவருடன் இவரது பாரியாரும், இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஏற்பாட்டாளராகவும் கடமையாற்றி வரும் திருமதி அப்சாரி சிங்கபாகு திலகரத்னவும், இன்றைய தினம் (05) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *