உள்நாடு

பொதுஜன பெரமுனவில் இரண்டு அல்லது மூன்று உறுப்பினர்களே எஞ்சுவார்கள். – பிரசன்ன ரணதுங்க

அரசாங்கத்திற்கு தனிப்பெரும்பான்மை இருப்பதால் அடுத்த இரண்டு மூன்று மாதங்களுக்கு அரசாங்கத்தை நடத்துவதில் சிக்கல் இருக்காது என ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரும், நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

சரியான தீர்மானம் எடுக்கப்படாவிடின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இரண்டு அல்லது மூன்று உறுப்பினர்களே எஞ்சுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியின் பின்னர் பொதுஜன பெரமுன அல்லது வேறு கட்சியுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக தெரிவித்த அவர், நாட்டில் தற்போது புதிய அரசியல் கலாசாரம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

திவுலபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *