விளையாட்டு

ஜுலை மாத சிறந்த வீராங்கனைக்கான விருதுக்கு சமரியும் பரிந்துரை

ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐ.சி.சி கௌரவித்து வருகிறது. அதன்படி ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐ.சி.சி அறிவித்துள்ளது.

அதன்படி, ஐ.சி.சியால் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஜுலை மாத சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளைகளில் இலங்கை அணியின் தலைவர் சமரி அத்தபத்து சேர்க்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த 9ஆவது ஆசியக் கிண்ண ரி20 போட்டியில் சமரி அத்தபத்து 304 ஓட்டங்களை பெற்றதுடன் 4 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியமையால் முதல் முறையாக இலங்கை மகளிர் அணி ஆசியக்கிண்ணத்தை வெற்றி கொண்டிருந்தது.

மேலும் சமரியுடன் பெயரிடப்பட்டுள்ள ஏனைய இருவரும் இந்திய மகளிர் அணியை சேர்ந்தவர்களாவர். அதன்படி, இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். ஐ.சி.சியின் உத்தியோக பூர்வ இணையத்தளத்திற்கு பிரவேசித்து இவர்களுக்கு வாக்களிக்க முடியும் என ஐசிசி குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *