உள்நாடு

ரணிலை மீண்டும் ஜனாதிபதியாக்குவோம் – பிரசன்ன சூளுரை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக்க, கம்பஹா தொகுதியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன ஒன்றிணைந்துள்ளதுடன், அதற்கான வேலைத்திட்டங்களையும் தயாரித்துள்ளன.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில், இன்று (04) உடுகம்பளவில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்தக் கூட்டு வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டது.ஆட்சேர்ப்பு, வாக்குச் சாவடி முகவர்கள் நியமனம், சிறு பொதுக் கூட்டங்கள், டிஜிட்டல் தொழில்நுட்பம் போன்றவற்றைப் பயன்படுத்தி, தேர்தல் நடவடிக்கைகளைக் கூட்டாக முன்னெடுப்பதற்காக, அனைத்து கட்சிகளையும் கொண்ட கூட்டு வழி நடத்தல் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதன்போது தெரிவித்தார்
.

( ஐ. ஏ. காதிர் கான் )

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *