உள்நாடு

நால்வர் நீக்கம்..! நாமலுக்கு புதிய பொறுப்பு..!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன ரணதுங்க, எஸ்.எம். சந்திரசேன, காஞ்சன விஜேசேகர, ரமேஷ் பதிரண ஆகியோர், மாவட்டத் தலைவர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
இதேவேளை, அநுராதபுரம் மாவட்டத் தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்‌ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்டத் தலைவராக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த, மாத்தறை மாவட்டத் தலைவராக நிபுண ரணவக்க, காலி மாவட்டத் தலைவராக மொஹான் டி சில்வா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *