உள்நாடு

ஜனாதிபதித் தேர்தல் ; கட்டுப்பணம் செலுத்தியவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு

2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இது வரை 14 வேட்பாளர்கள் தமது கட்டுப்பணங்களை வைப்பிலிட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி, ரணில் விக்கிரமசிங்க, சரத் கீர்த்திரத்ன, ஓஷல ஹேரத், ஏ.எஸ்.பி. லியனகே, சஜித் பிரேமதாஸ, பீ. டபிள்யூ.எஸ்.கே. பண்டாரநாயக்க, விஜயதாஸ ராஜபக்ஷ, கே.கே. பியதாச, சிறிதுங்க ஜயசூரிய, அஜந்த டி. சொய்சா, கே. ஆனந்த குலரத்ன, சரத் மனமேந்திர, வணக்கத்துக்குரிய பத்தரமுல்லை சீலரத்ன தேரர் மற்றும் அக்மீமன தயாரத்ன தேரர் ஆகியோர் தமது கட்டுப்பணங்களை வைப்பிலிட்டுள்ளனர் என, தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக் காட்டியுள்ளது.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *