உள்நாடு

இலங்கையின் இன்றைய பேசுபொருள் சஹ்மிக்கு – ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் வாழ்த்து!!

நாட்டின் சுற்றுலாத் தளங்களை உலகறியச் செய்யும் நோக்குடன், இனமத வேறுபாடின்றி இலங்கையர்கள் அனைவரும் ஒற்றுமையானவர்கள் என்பதை உலகிற்கு பறைசாற்றும் நோக்குடனும்,நாட்டைச் சுற்றி கரையோரமாக நடந்து வரும் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள பேருவளை சஹ்மி ஷஹீத் இற்கு ,பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் அவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

தனது வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது;

இலங்கை வரலாற்றை சற்று பின்னோக்கிப் பார்த்தால்,அரேபியர்கள் கால்பதித்த முதல் ஊர் என்ற சரித்திரப் புகழ் பேருவளைக்குத் தான் உள்ளது, அதனடிப்படையில் எம் முன்னோர்கள் பலர், பேருவளையின் தனித்துவத்தை உலகறியச் செய்யும் பலகட்ட முயற்சிகளை செய்திருப்பதை நாம் அறிவோம்.
அதே பாதையில் ,அதே உன்னத நோக்குடன் இன்று பேருவளையின் நாமத்தை உலகறியச் செய்யும் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள சஹ்மி ஷஹீத் வரலாற்றில் பதியப்பட வேண்டிய வரலாற்று செல்வன் என்றால் அது மிகையாகாது.

சஹ்மி, தன் பயணத்தின் இறுதிக் கட்டத்தை அண்மித்துக் கொண்டிருக்கிறார் .அவரது அடுத்தகட்ட பயணங்களும் எந்தத் தடைகளும் இன்றி வெற்றிகரமாக கடந்து வர நான் பிராத்தனை செய்கிறேன். அதுபோல் ஷஹ்மி பேருவளை நகரில் கால்பதிக்கும் போது , பேருவளை இளைஞர்கள் அனைவரும் திரண்டு அவரை உற்சாகமாக வரவேற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.
என்று கூறினார்.

சஹ்மி ஷஹீத் இன்று (04) தனது 23 ஆவது நாள் பயணத்தை திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டையை நோக்கி பயணிக்கவுள்ளமை மேலும் குறிப்பிடத்தக்கது.

பேருவளை : பீ.எம் முக்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *