உள்நாடு

கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் எழுதிய “திதுலன தாரக்கா” நூல் ஆய்வு ஊடகத்துறை அமைச்சின் செயலாளரிடம் கையளிப்பு..!

அரசாங்க தகவல் திணைக்களத்தின் முன்னாள் தகவல் அதிகாரியும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் எழுதிய இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றிய நூலான “திதுலன தாரக்கா” என்ற நூலை ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்டவுக்கு நூலாசிரியரால் கையளிக்கப்பட்டது.
கடந்த வியாழக்கிழமை ஊடகத்துறை அமைச்சில் இந்த நிகழ்வு இடம் பெற்றது.
இலங்கை இலக்கிய வரலாற்றில் முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றி எழுதிய முதலாவது ஆய்வு நூலாக இந்நூல் பல்கலைக்கழக பேராசிரியர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *