உள்நாடு

ஜனாதிபதித் தேர்தலில் சஜித்துக்கே எமது ஆதரவு – தயாசிறி அதிரடி அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவளிப்பதாக, பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே, பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்தார். இதன்போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களான திலங்க சுமதிபால, ரோஹண லக்ஷ்மன் பியதாஸ ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, “புதிய குழுவொன்றுக்கு நாட்டைக் கையளிக்க வேண்டுமானால், ஐக்கிய மக்கள் சக்திக் கூட்டமைப்பிலேயே அதற்கான பலமான தலைவர்கள் பலர் உள்ளனர்.அவர்களுடன் இணைந்து இந்தப் பயணத்தைத் தொடர வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.

அதற்கான செயற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எமது அடையாளத்தை வைத்துக்கொண்டு தனித் தேர்தல் பிரசாரத்தை நடத்தி வருகிறது. இந்தப் பெறுமதிமிக்க முக்கியமான வேளையில், நாங்கள் சரியான முடிவையே எடுத்துள்ளோம் என்று எங்கள் அன்பான கட்சி உறுப்பினர்களிடம் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்” என்றார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *