உள்நாடு

கற்பிட்டி மாபெரும் மோட்டார் குரோஸ் ஏற்பாடுகள் பூர்த்தி ஞாயிறு காலை போட்டிகள் ஆரம்பம்

கற்பிட்டி கே.ஆர்.சீ கழகம் நுவரெலியா மோட்டார் குரோஸ் கழகத்துடன் இணைந்து நடாத்தும் மாபெரும் மோட்டார் குரோஸ் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (04) காலை 10 மணிமுதல் மாலை 06 மணிவரை கற்பிட்டி தேத்தாவாடி ரேஸ் குரோஸ் மைதானத்தில் இடம்பெற உள்ளது.

கற்பிட்டி வரலாற்றில் முதன் முறையாக நாட்டின் பல பாகங்களில் உள்ள தேசிய மோட்டார் குரோஸ் வீரர்கள் கலந்து சிறப்பிக்க உள்ள மாபெரும் மோட்டார் குரோஸ் போட்டியினை கண்டுகளிக்க சகலருக்கும் அதன் ஏற்பாட்டுக் குழுவினரும் கே.ஆர்.சீ கழகத்தின் தலைவர் ஜே.எம் தாரீக்கும் அழைப்பு விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் ,புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *