உள்நாடு

காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா இன்று

தென்மாகாணம் காலியில் அமையப்பெற்றுள்ள இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் ஆறாவது பட்டமளிப்பு விழா இன்று 03ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு அரபுக் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் தலைவர் அல் உஸ்தாத். எம்.ஓ. ஃபத்ஹுர் ரஹ்மான் (பஹ்ஜி) அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ள இப்பட்டமளிப்பு விழாவுக்கு பிரதம அதிதியாக சவூதி அரேபியாவின் நஜ்ரான் பல்கலைக்கழக இஸ்லாமிய சட்டம் மற்றும் இறையியல் பீடத்தின் பேராசிரியரான யு.எல். அஹ்மத் அஷ்ரஃப் (Ph.D, Al Azhar) கலந்துகொள்ளவுள்ளார்.

இவ்விழாவில் நினைவு மலரும், “உங்களுக்குத் தெரியுமா” நூலும் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *