உள்நாடு

அனுராதபுரத்தில் இரண்டு தினங்களில் ஐந்து சிறுவர் துஷ்பிரயோகங்கள்

அனுராதபுரம் பிரதேசத்திலுள்ள நான்கு பொலிஸ் பகுதியில் கடந்த 30 மற்றும் 31ம் திகதிகளில் ஐந்து சிறுவர் பாலியல் துக்ஷ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

அதன்படி பரசன்கஸ்வெவ பொலிஸ் பகுதியில் 16 வயதுடைய சிறுமியொருவரை பாலியல் துக்ஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சிறுமியின் தந்தையின் 39 வயதுடைய சகோதரன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 50 வயதுடைய சந்தேக நபரொருவரை கைது செய்வதற்கு பரசன்கஸ்வெவ பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்நிலையில் கலாதிவுல்வெவ பொலிஸ் பகுதியில் வசித்து வரும் 14 வயதுடைய சிறுமியொருவரை ஏமாற்றி பாலியல் துக்ஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 25 வயதுடைய சிறுமியின் காதலனை கலாதிவுல்வெவ பொலிசார் கைது செய்துள்ளனர்.

இதேவேளையில் தம்புத்தேகம பொலிஸ் பகுதியில் 14 வயதுடைய சிறுமியொருவரை பாலியல் துக்ஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சிறுமி கல்வி பயிலும் பாடசாலை அதிபர் உட்பட மூவரை கைது செய்வதற்கு  பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன்.அதே பொலிஸ் பகுதியில் 15 வயதுடைய சிறுமியோருவரை பாலியல் துக்ஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 17 வயதுடைய சிறுவன் ஒருவனை தம்புத்தேகம பொலிசார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை திறப்பனை பொலிஸ் பகுதிக்குட்பட்ட பகுதியில் 16 வயதுடைய சிறுமியொருவரை பாலியல் துக்ஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 24 வயதுடைய இளைஞர் ஒருவரை திறப்பனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களை நீதி மன்றில் ஆஜர்படுத்தியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

 

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *