உள்நாடு

கலபொட ஞானிஸ்ஸர மகாநாயக்க தேரரின் மறைவு எமது நாட்டிற்கு பாரிய இழப்பாகும்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

ஹுனுபிட்டிய கங்காராம விகாரையின் பிரதம சங்கநாயக்கர் கலபொட ஞானிஸ்ஸர மகாநாயக்க தேரரின் இறப்பு குறித்து நான் மிகுந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கின்றேன். கங்காராம புனித விகாரை உட்பட பல்வேறு பிரதேசங்களில் பல ஆக்கப்பூர்வமான அபிவிருத்திப் பணிகளை அவர் முன்னெடுத்துள்ளார் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எந்தப் பணியிலும் தொய்வடையாமல், குறிப்பிட்ட இலக்கை நிர்ணயித்து, அந்த இலக்கை முழுமையாக அடைய குறிப்பிட்ட கால அவகாசத்துடன் அந்த இலக்கை நோக்கி அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஒருவர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எமது நாடு வங்குரோத்தடைந்துள்ள நிலையில், அவரும், அவரது தூரநோக்கும், செயல்திட்டமும் நாட்டிற்கு முக்கியமான ஒன்றாக காணப்படுகிறன்றது. அவரது மறைவுக்கு இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

காலஞ்சென்ற கலபொட ஞானிஸ்ஸர மகாநாயக்க தேரர் வசித்து வந்த கங்காராம விகாரைக்கு இன்று(02) பிற்பகல் விஜயம் செய்த போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *