உள்நாடு

மஹிந்த – ரணில் இடையில் அரசியல் ஐக்கியத்தை ஏற்படுத்த தினேஷ் தீவிர முயற்சி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் அரசியல் ரீதியில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

இரண்டு தலைவர்களுக்கும் நெருக்கமான அரசியல் வட்டாரங்கள் இதனைத் தெரிவித்துள்ளன. தனது பாடசாலைத்தோழனான ஜனாதிபதியுடனும் முன்னாள் ஜனாதிபதியுடனும் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ள தினேஷ் குணவர்தன, தேர்தலில் ஜனாதிபதிக்கான பொதுத்தளத்தை ஏற்படுத்துவதற்காக, அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளையும் ஐக்கியப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டார் என, விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனினும், “பொதுஜன பெரமுனவின் சார்பில் வேட்பாளரை நிறுத்த வேண்டும்” என பஷில் ராஜபக்ஷ பிடிவாதமாக இருந்ததால், இந்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. “ஜனாதிபதிக்கு வேறு ஒருவரை நிறுத்துவது” என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மத்திய குழு தீர்மானித்துள்ளது.

தேர்தல் கூட்டணியொன்றை ஏற்படுத்துவதற்காக பிரதமர், ஜனாதிபதிக்கும் முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையில் பல சந்திப்புக்களை ஏற்பாடு செய்திருந்தார். இருப்பினும், இருவரையும் ஐக்கியப்படுத்தும் முயற்சிகளில் பிரதமர் தொடர்கின்றார் என விடயமறிந்த வட்டாரங்கள் மேலும் சுட்டிக் காட்டியுள்ளன.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *