உள்நாடு

நாளாந்தம் 1000 கருக்கலைப்புக்கள்…!

நாளாந்தம் சுமார் 1000 சட்டவிரோத கருக்கலைப்பு சம்பவங்கள் பதிவாகுவதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு (31) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் பாலியல் கல்வி தொடர்பான தெளிவின்மையால் சட்டவிரோத கருக்கலைப்பு அதிகரிப்புக்கான காரணம் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் விசேட வைத்தியர் சமல் சஞ்ஜீவ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் மூலம் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *