உள்நாடு

ஜுலை 31 முதல் நிறுத்தப்பட்ட காஸா சிறுவர் நிதியம்…!

காஸா மோதல்களால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உதவுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் “காஸா சிறுவர் நிதியம்” ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில், சிறுவர் நிதியத்திற்கு பங்களிப்புச் செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் 2024 ஜூலை 31ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளதாகவும் நன்கொடைகளை மேலும் வைப்பிலிட வேண்டாம் எனவும் ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

ஜூலை 31ஆம் திகதிக்கு பின்னர் எவரேனும் ஜனாதிபதி செயலகத்தின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யும் பட்சத்தில் அந்த நிதி சமூக நிவாரணச் செயற்பாடுகளுக்காக ஜனாதிபதி நிதியத்திடம் கையளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *