உள்நாடு

ஒலுவில் அல் – மதீனா வித்தியாலய மாணவர்கள் ஆங்கில தினப் போட்டியில் சாதனை

அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் அட்டாளைச்சேனை கோட்டத்திற்குட்பட்ட ஒலுவில், பாலமுனை, ஆலங்குளம், அட்டாளைச்சேனை ஆகிய ஊர்களிலுள்ள 27 பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்ட கோட்ட மட்டத்திலான ஆங்கில தினப் போட்டி பாலமுனை அல் – ஹிதாயா வித்தியாலயம், அட்டாளைச்சேனை அந் – நூர் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் M.H.M.றஸ்மி தலைமையில் இடம்பெற்றது.

இதில் பங்கு பற்றிய ஒலுவில் அல் – மதீனா வித்தியாலய மாணவர்கள் நான்கு பேர் முதன்மை வெற்றிகளைப் பெற்றனர் அந்தவகையில்,

M.F. முஷர்ரப் அதனி முதலாம் இடம் (Copy writing event),
ஹப்ஸா ஹனூன் இரண்டாம் இடம் (Copy writing event),
ஷுரைப் அல் ஹகம் முதலாம் இடம் (Copy writing event),
பதீனா ஸஹ்லா மூன்றாம் இடம் (Recitation event)

இம் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று 2024.07.31 ம் திகதி காலை பாடசாலையின் அதிபர் கே.எல். அமீர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.


(இஸட்.ஏ.றஹ்மான்- ஒலுவில்  செய்தியாளர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *