உள்நாடு

திருகோணமலை மாவட்டத்தில் கால்தடம் பதித்த ,வரலாற்று நாயகன் சஹ்மி ஷஹீத்..!

நடைபவணியாக நாட்டைச் சுற்றிவரும் நோக்குடன் கடந்த 13 ஆம் திகதி தன் பயணத்தை ஆரம்பித்த ஷஹ்மி ஷஹீத் தற்பொழுது கிழக்கு மாகாணத்தின் தோப்பூரை சென்றடைந்துள்ள நிலையில் ,அங்குள்ள மக்களால் பெரும் வரவேற்பளிக்கப்பட்டு வருகின்றது.

கிழக்கு மாகாணத்தின், அக்கரைப்பற்று,அட்டாளைச்சேனை,திருக்கோயில் ,காத்தான்குடி,மருதமுனை,ஏறாவூர்,ஒட்டமாவடி போன்ற தமிழ் பேசும் மக்கள்.பெரும்பான்மையாக வாசிக்கக்கூடிய பிரதேசங்களில் பாரிய வரவேற்பளிக்கப்பட்டதோடு, கடந்த 31 ஆம் திகதி தோப்பூர் சென்றடைந்தார்.

கிழக்கின், இளைஞர் அமைப்புக்கள்,நலன்புரி சங்கங்கள்,வர்த்தக நிறுவனங்கள்,பொதுமக்கள் என அனைவராலும் பேருவளையின் சரித்திரப்புதல்வன் சஹ்மி ஷஹீத் வரவேற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும், ஷஹ்மி ஷஹீத் தன் சாதனைபயணத்தை வெற்றிகரமாக முடித்து பேருவளை வந்தடையும் போது அவரை பிரமாண்டமான முறையில் வரவேற்பதற்காக ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக, சிமி ஹோல்டிங் பிரைவேட் லிமிடட் உரிமையாளர் அல்ஹாஜ் இஜ்லான் யூசுஃப் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

(பேருவளை முக்தார்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *