உள்நாடு

ஊழலற்றத்தன்மையை நிரூபித்துள்ள தேசிய மக்கள் சக்தியால் மாத்திரமே நாட்டை மீட்டெடுக்க முடியும். – இளைப்பாறிய றியர் அத்மிரால் பிரெடி செனவிரத்ன

நாங்கள் தேசிய மக்கள் சக்தியுடன் ஒன்று சோ்ந்து செயலாற்றுதல் சம்பந்தமாக எம்முடன் இருந்த ஒரு சிறிய குழுவினர் விமர்சனங்களை முன்வைத்திருந்தார்கள். அனைவரும் அறிந்தவாறே இளைப்பாறிய முப்படை அங்கத்தவர்களும் தாம் விரும்பிய அரசியல் கட்சியுடன் இணைந்து செயலாற்றுவதற்கான உரிமையை கொண்டிருக்கிறார்கள்.

வேறு அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயலாற்றுபவர்கள் தொடர்பில் எங்களுக்கு எந்த விதமான விமர்சனமும் கிடையாது. எனினும் அதிட்டனவுடன் இணைந்துள்ள நாம் எவரும் முனைப்பான சேவையின் போது அரசியலுடன் தொடர்புபட்டிருந்தவர்களல்ல. இடம்பெறுகின்ற சமூக அநீதி தொடர்பிலே சமூகத்திற்காக ஆற்றுகின்ற அரும்பணி என்ற வகையிலேயே நாங்கள் இளைப்பாறி பல வருடங்களுக்கு பின்னர் இந்த அரசியல் இயக்கத்துடன் இணைந்திருக்கிறோம்.

இந்த நாட்டை இதுவரை ஆட்சி செய்த இரண்டு கட்சிகளும் மரமும் பட்டையும்போல் பிணைந்து ஊழல் மிக்க அரசியல் கலாச்சாரத்தை பேணி வந்தார்கள். இந்த நிலைமையிலிருந்து ஊழலற்றத் தன்மையை நிரூபித்துள்ள தேசிய மக்கள் சக்தியால் மாத்திரமே நாட்டை மீட்டெடுக்க முடியும். நடப்பு தேவை என்ற வகையிலும் தேசிய அரும்பணி என்ற வகையிலும் இளைப்பாறிய முப்படை கூட்டமைவினை நிறுவி தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயலாற்றி வருகிறோம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *