உள்நாடு

யாருக்கு ஆதரவு? சு.க.முடிவு நாளை..!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பல்வேறு நிலைப்பாடுகள் நிலவுகின்ற நிலையில் சுதந்திரக் கட்சி உள்ளிட்ட புதிய கூட்டணி ஆதரவளிக்கவுள்ள ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை நாளை புதன்கிழமை உத்தியோக பூர்வமாக அறிவிக்கவுள்ளதாக அந்தக் கட்சியின் பிரதி தலைவர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அதேபோன்று சுதந்திரக் கட்சிக்குள் இருக்கும் உறுப்பினர்கள் மூன்று ஜனாதிபதி வேட்பாளர் களுக்கு ஆதரவளிக்கவுள்ளதாகவும் அந்தக் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் ஜனாதிபதி வேட்பாளர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.

அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பாராளு மன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் ஆதரவளிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *