உள்நாடு

நாம் நன்றியுள்ள மனிதர்கள்.அதனால் ரணிலுக்கு ஆதரவு.எஸ்.எம்.சந்திரசேன எம்.பீ

நன்றியுள்ள மனிதர்கள் என்ற அடிப்படையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதற்கு அனுராதபுரம் மாவட்ட  பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.

இன்று (30) பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேனவின் அனுராதபுரம் குருந்தம் குளம் வீட்டில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன அலுவலகத்தில் இடம்பெற்ற மாவட்ட சம்மேளனத்தின் போது பெரும்பான்மையினரின் ஆதரவுடன் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்ஜித் சமரகோன் . முன்னாள் மாகாண, பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *