இலங்கை சுங்கத்தில் தேங்கிக்கிடக்கும் அல்குர்ஆன் தர்ஜமா மற்றும் குர்ஆன் பிரதிகளை விடுவிக்க முஸ்லிம் சமய கலாசார திணைக்களமும் முஸ்லிம் எம்பீக்களும் உடனடி முயற்சி எடுக்க வேண்டும்..! -ஸ்ரீலங்கா உலமா கட்சி வேண்டுகோள்
இலங்கை மக்களுக்கு இலவசமாக வழங்க என அனுப்பப்பட்டு சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக இலங்கை சுங்கத்தில் தேங்கிக்கிடக்கும் அல்குர்ஆன் தர்ஜமா மற்றும் குர்ஆன் பிரதிகளை விடுவிக்க முஸ்லிம் சமய கலாசார திணைக்களமும் முஸ்லிம் எம்பீக்களும் உடனடி முயற்சி எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா உலமா கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
மதீனாவில் அச்சிடப்பட்ட அல்குர்ஆன் தர்ஜமா சுமார் 32 வருடங்களுக்கு மேலாக இலங்கைக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த வருடமே இவ்வாறு சுங்கத்தில் தேங்கி கிடக்கிறது.
மேற்படி தர்ஜமாவில் ஏதும் தவறுகள் இருக்குமாயின் அவை என்ன என்பதை ஆதாரத்துடன் சுட்டிக்காட்ட முடியுமா என முஸ்லிம் சமய திணைக்களத்திடமும் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவிடமும் கோரிக்கை விடுக்கிறோம்.
அவ்வாறு தவறுகள் இல்லையென்றால் அவற்றை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாறாக இவ்வாறு அல்குர்ஆன் மாதக்கணக்கில் தேங்கிக்கிடக்க அனுமதிக்க வேண்டாம் என உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.
முபாறக் அப்துல் மஜீத்
செயலாளர்.
ஸ்ரீலங்கா உலமா கட்சி.