விளையாட்டு

இலங்கையின் பந்துவீச்சில் தடுமாறிப் போன இந்தியா 138 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்துள்ளது

இலங்கை அணிக்கு எதிரான 3ஆவதும் , இறுதியுமான ரி20 போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி இலங்கையின் பந்துவீச்சில் தடுமாற்றம் அடைந்து .

இப்போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடும் வாய்ப்பை இந்திய அணிக்கு வழங்கியிருந்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 137 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் சுப்மன் கில் 39 ஓட்டங்களையும் , ரயான் பராக் 26 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றனர். பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் மகேஷ் தீக்சன 3 விக்கெட்டுக்களையும், வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். அதற்கமைய இத் தொடரில் இலங்கை அணி ஆறுதல் வெற்றியைப் பெற 138 ஓட்டங்களைப் பெற வேண்டியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *