உள்நாடு

மொட்டு வேட்பாளர் இன்று மாலை அறிவிப்பு…!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த இறுதித் தீர்மானம் இன்று (29) அறிவிக்கப்படவுள்ளது.

பொதுஜன பெரமுனவின் பொலிட்பீரோ விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில் மாலை 4.00 மணிக்கு தீர்மானத்தை எடுக்கவுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று (28) மற்றுமொரு கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடப் போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். அவருக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 40க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *