உள்நாடு

புத்தளம் இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்ட PILLARS அமைப்பினால் கெளரவிப்பு நிகழ்வு..!

புத்தளம் கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் அதிபர்களாக சேவையாற்றி, இலங்கை கல்வி நிருவாக சேவைக்கு (SLEAS) உள்வாங்கப்பட்ட ஏ.எம்.ஜவாத், எம். நௌசாத் ஆகியோருக்கான கெளரவிப்பு நிகழ்வொன்று PILLARS அமைப்பினால் நேற்று (28.7.2024) மாலை புத்தளம் இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் தலைவரும் புத்தளம் மாவட்டத்தின் உப தலைவருமாகிய அஷ்ஷேக் ஜிப்னாஸ் (அல்மிஸ்பாஹி) யும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை உப செயளாலர் அஷ்ஷேக் இமாம்தீன் (அஷ்ரபீ) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

கல்வி மேம்பாட்டுக்கும் சீர்திருத்தத்துக்குமான புத்தளம் கல்வியியலாளர்களின் மன்றத்தினால் (PILLARS) பல சேவைகள் செய்யப்படுகின்றன.

PILLARS அமைப்பில் உள்ள அனைவருக்கும் அல்லாஹ்தாஆலா ரஹ்மத் செய்வானாக

ஊடகப் பிரிவு
அகில இலங்கை
ஜம்இய்யத்துல் உலமா
புத்தளம்
நகரக் கிளை

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *