உள்நாடு

கைத்துப்பாக்கியுடன் பல்லேகமவில் ஒருவர் கைது…!

இபலோகம பொலிஸ் பகுதிக்குட்பட்ட பல்லேகமவில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் 49 வயதுடைய மரதன்கடவல பகுதியைச் சேர்ந்தவராவர். சனிக்கிழமை (27) மரதன்கடவல பொலிசார் பல்லேகம பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *