உள்நாடு

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை பேட்மிண்டன் வீரர்கள் தேசிய மட்டத்துக்கு தெரிவு..!

திருகோணமலை Mc Heizer உள்ளக விளையாட்டரங்கில் கடந்த 25,26,27ம் திகதிகளில் நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான பெட்மின்டன் போட்டியில் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை வீரர்கள்  மிகவும் சிறப்பாக  விளையாடி 18 வயதுக்குட்பட்ட பிரிவில் இரண்டாம் இடத்தை பெற்று கிழக்கு மாகாணத்தில் தனக்கான அடையாளத்தை நிருபித்து தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவ் அடைவிற்காக உறுதுணையாய் இருந்து மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கி ஊக்கப்படுத்திய கல்லூரி முதல்வர் எம்.ஐ.ஜாபிர் அவர்களுக்கும் மற்றும் பிரதி அதிபர்கள்,  மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கி வழிப்படுத்திய பாடசாலை உடற்பயிற்சி ஆசிரியர்கள் ஏ.எம். அப்ராஜ் ரிலா, எம்.எச்.எம். முதன்சீர் மற்றும் போட்டிகளில் பங்கேற்று தமது உச்ச திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதோடு, போட்டிகளில் பங்கேற்க தேவையான உதவிகளை மேற்கொண்ட பாடசாலை நிர்வாகம், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு மற்றும் பழைய மாணவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக பாடசாலை சமூகம் தெரிவித்துள்ளது.

 

(நூருல் ஹுதா உமர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *